sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கிராமத்திற்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் அச்சம்

/

 கிராமத்திற்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் அச்சம்

 கிராமத்திற்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் அச்சம்

 கிராமத்திற்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் அச்சம்


ADDED : நவ 15, 2025 01:29 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே கடல் நீர் மட்டம் உயர்ந்து, புதுக்குடி கிராமத்திற்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரை ஓரம் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். இங்கு நேற்று காலை திடீரென கடல் நீர் மட்டம் உயர்ந்து கிராமத்திற்குள் நீர் புகுந்தது.

கிராமத்தினர் கூறியதாவது:

தொண்டி கடலில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சில நாட்களாக கடல் நீர் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக உள்ளது.

நேற்று காலை, 6:00 மணிக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து கிராமத்திற்குள் புகுந்தது. கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகளை கடல் நீர் சூழ்ந்தது. பதற்றமடைந்த மீனவர்கள் படகுகளை கரையேற்றினர்.

ஆண்டுதோறும் இம்மாதத்தில் கடல் நீர் மட்டம் வழக்கமாக உயரும். இதற்கு வாங்கல் வெள்ளம் என்ற பெயர் உண்டு. கடல் பெருக்கு ஏற்படும் போது இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும். நேற்று 100 அடி வரை கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சில மணி நேரங்களில் வடிய துவங்கியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us