sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ராமேஸ்வரத்தில் தரமற்ற ரோடு பணிக்கு மக்கள் எதிர்ப்பு

/

 ராமேஸ்வரத்தில் தரமற்ற ரோடு பணிக்கு மக்கள் எதிர்ப்பு

 ராமேஸ்வரத்தில் தரமற்ற ரோடு பணிக்கு மக்கள் எதிர்ப்பு

 ராமேஸ்வரத்தில் தரமற்ற ரோடு பணிக்கு மக்கள் எதிர்ப்பு


ADDED : டிச 24, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் தரமற்ற முறையில் பேவர்பிளாக் சாலை அமைத்ததால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள சிவகாமி நகர், ஏரகாடு, ஆத்திக்காடு பகுதியில் ரூ.65 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் டெண்டர் விடப்பட்டு நேற்று பணி துவங்கியது.

இதில் சிவகாமி நகரில் ஏற்கனவே இருந்த சிமென்ட் சாலை மீது மணல் பரப்பி, அதன் மீது பேவர்பிளாக் சாலை அமைத்தனர்.

இதற்கு தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய சாலையை அகற்றி விட்டு அதன் மீது மணல் பரப்பி சாலை அமையுங்கள். அப்போது தான் மழைக் காலத்தில் சாலையில் தண்ணீர் நிற்காமல் நிலத்திற்குள் செல்லும் எனக் கூறி சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை யிட்டனர்.

இதனால் சாலை அமைக்கும் பணியை ஊழியர்கள் நிறுத்தினர். பின் அதிகாரிகள் சமரசம் செய்து பழைய சாலையை உடைத்து அகற்றிய பின் புதிய சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us