/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 05, 2024 04:22 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடத்தின் முன் ஊருணி இருப்பதால் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திரா நகர், சேமனுார் செபஸ்தியர்புரம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தற்போது புதிய கட்டடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே 30 மீட்டர் துாரத்தில் ஊருணி உள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் வசதி இல்லாததால் பள்ளி முன்பு விளையாடுகின்றனர்.
இந்நிலையில் ஊருணியால் மாணவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புஉள்ளது. எனவே பள்ளியை சுற்றைசுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

