/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேராவூரில் அடிப்படை வசதிகளின்றி அவதி
/
பேராவூரில் அடிப்படை வசதிகளின்றி அவதி
ADDED : பிப் 03, 2026 06:37 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பேராவூர் வடக்கு பகுதி கிராமத்தில் குடிநீர், ரோடு வசதிகளின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். பேராவூர் ஊராட்சி வடக்கு குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். அப்போது மக்கள் கூறியதாவது:
வடக்கு குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு காவிரி குழாயில் தண்ணீர் வருவதே இல்லை. ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நடந்து செல்வதற்கு கூட சிரமப்படுகிறோம். குடிநீர் பிடிக்க மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். புதிதாக ரோடு அமைத்து, கூடுதலாக தெருவிளக்கு வசதிகள் செய்துதர கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.-----

