sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 சாயல்குடியில் சேதமடைந்த ரோடுகளை சரி செய்யக்கோரி பா.ஜ., சார்பில் மனு

/

 சாயல்குடியில் சேதமடைந்த ரோடுகளை சரி செய்யக்கோரி பா.ஜ., சார்பில் மனு

 சாயல்குடியில் சேதமடைந்த ரோடுகளை சரி செய்யக்கோரி பா.ஜ., சார்பில் மனு

 சாயல்குடியில் சேதமடைந்த ரோடுகளை சரி செய்யக்கோரி பா.ஜ., சார்பில் மனு


ADDED : நவ 22, 2025 02:38 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்க சாலைகளை தோண்டி பல இடங்களில் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வீட்டு உரிமையாளர்களிடம் குழாய் இணைப்பிற்கு பணம் கேட்பதாகவும் புகார் எழுந்தது.

கடலாடி தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ராஜசேகர பாண்டியன், முன்னாள் மண்டல் தலைவர் சத்தியமூர்த்தி, மகளிர் அணி செயலாளர் ஜெய சரஸ்வதி உள்ளிட்ட பா.ஜ.,வினர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், சாயல்குடி தெருக்களில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், குழாய் இணைப்பிற்கு பணம் கேட்பதாகவும் முறையாக குடிநீர் குழாய்களை பதிக்காமல் மேடு பள்ளங்களாக மாற்றியுள்ளதால் நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் தெரிவித்தனர்.

குழாய் இணைப்புக்கு பணம் கேட்கும் நபர்கள் குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் ஜல் ஜீவன் குழாய் இணைப்பு பணிகள் முடிந்தவுடன் சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us