sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலை மத்திய அரசு நிர்வகிக்க பிரதமருக்கு மனு

/

ராமேஸ்வரம் கோயிலை மத்திய அரசு நிர்வகிக்க பிரதமருக்கு மனு

ராமேஸ்வரம் கோயிலை மத்திய அரசு நிர்வகிக்க பிரதமருக்கு மனு

ராமேஸ்வரம் கோயிலை மத்திய அரசு நிர்வகிக்க பிரதமருக்கு மனு


ADDED : டிச 11, 2024 06:14 AM

Google News

ADDED : டிச 11, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களிடம் கட்டண வசூல் வேட்டையை தடுக்க கோயிலை மத்திய அரசு நிர்வகிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து மக்கள் கட்சி தலைவர் பிரபாகரன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இக்கோயிலை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக தமிழக அரசு நிர்வகிக்கிறது. அதிகாலை 5:00 முதல் 6:00 மணி வரை நடக்கும் ஸ்படிகலிங்க பூஜைக்கு ரூ. 50, ரூ. 200 கட்டணம் வசூலிக்கின்றனர். இப்பூஜையை கட்டணம் செலுத்த முடியாத பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் சுவாமி, அம்மனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோயில் சிற்பங்கள் கட்டடக் கலைகளை ரசிக்க முடியாதபடி தடுப்பு வேலிகளை அமைத்து மறைத்துள்ளனர்.

மேலும் 22 தீர்த்தங்களில் நீராட ஒரு பக்தருக்கு ரூ. 25 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் நீராடும் வழியில் பராமரிப்பின்றி பாசி படிந்து, பக்தர்கள் வழுக்கி விழுகின்றனர். மேலும் கோயில் ரதவீதியில் பக்தர்களுக்கு இலவச தங்குமிடம், கழிப்பறை வசதி இல்லை.

இக்கோயிலில் உண்டியல் காணிக்கை, புனித நீராடல், பிரசாத விற்பனை, பூஜை கட்டணம் என ஆண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இந்த நிதியை கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு பிற பணிகளுக்கு பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றுகிறது.

ஆன்மிக பயிற்சி அற்ற ஊழியர்கள், பக்தர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி கோயிலை போர்க்களமாக மாற்றி உள்ளனர். எனவே பக்தர்களை வஞ்சிக்கும் தமிழக அரசிடம் இருந்து இக்கோயிலை மத்திய அரசு மீட்டு நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us