sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆற்றோர வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசு உற்பத்தி ஜோர்

/

ஆற்றோர வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசு உற்பத்தி ஜோர்

ஆற்றோர வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசு உற்பத்தி ஜோர்

ஆற்றோர வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசு உற்பத்தி ஜோர்


ADDED : பிப் 20, 2024 10:58 PM

Google News

ADDED : பிப் 20, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றங்கரையோர வாறுகால்களில் பிளாஸ்டிக் குப்பை போர்வையாக படிந்துள்ள நிலையில் கொசுக்கள் உற்பத்தி ஜோராக உள்ளதால் மக்கள் அலறுகின்றனர்.

பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாறுகால்களில் வெளியேற்றப்படுகிறது. இவை ஒட்டு மொத்தமாக பிரதான கால்வாய்கள், ரயில்வே டிராக் ஓரம் மற்றும் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள வாறுகால்களில் ஓடையாக செல்கிறது.

பரமக்குடி, எமனேஸ்வரம் தரைப்பாலம் அருகில் துவங்கி நகராட்சி எல்லையான சுந்தர் நகர் வரை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வாறுகால் கட்டப்பட்டது. மேலும் காட்டுப் பரமக்குடி எல்லை துவங்கி 2 கி.மீ., வரை வைகை ஆற்றின் கரையில் மணல் வெளியில் கழிவு நீர் செல்கிறது.

நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வாறுகால்களை சுத்தள் செய்வது இல்லை என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது சில மாதங்களாக ஆற்றங்கரையோர வாறுகால்கள் உட்பட அனைத்து கழிவு நீர் ஓடைகளும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

கட்டுக்கடங்காத பிளாஸ்டிக் விற்பனையால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் வாறுகாலில் போர்வையாக படிந்து அடர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த நகரும் கொசுத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி சுகாதாரத்துறையினர் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வாறுகால்களை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us