ADDED : மே 09, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்.,22ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து தேவிபட்டினம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை மரைன் போலீசார் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற கடலோரங்களில் ஆய்வு செய்தனர். படகில் கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர்.
அந்நியர்கள், பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். சந்தேகப்படும் நபர்கள் குறித்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் தெரிவித்தனர்.