sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் ஆவணங்களை சமர்ப்பித்த போலீசார்

/

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் ஆவணங்களை சமர்ப்பித்த போலீசார்

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் ஆவணங்களை சமர்ப்பித்த போலீசார்

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கில் ஆவணங்களை சமர்ப்பித்த போலீசார்


ADDED : நவ 11, 2025 11:27 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராணுவ ரகசியங்களை திருட உதியாக இருந்த இலங்கை, மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள் மீதான வழக்கில் தடயவியல் ஆவணங்களை கியூ பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52. இவரது அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வந்தார்.

இவரது ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இவர்கள் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கி ஆதார் கார்டு, சிம்கார்டுகளை பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவியிடம் முகமது யாசீர் கொடுத்துள்ளார்.

அதை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார்.

ராணுவ அதிகாரிகளின் அலைபேசிகளை ஹேக் செய்து தகவல்களை அழித்துள்ளனர்.

இது குறித்து தகவல் தெரிந்த கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார்.

மற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் ஆஜரானார். அப்போது கியூ பிரிவு தலைமை காவலர் இளங்கோவன் சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்தில் பரிசோதித்த அலைபேசி உள்ளிட்ட ஆவணங்களின் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பித்தார். மேற்கொண்டு வழக்கு விசாரணை நவ.,13க்கு ஒத்தி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us