ADDED : ஆக 06, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தபால் நிலையங்களில் மேம்படுத்தபட்ட அஞ்சல் தொழில் நுட்ப பணிகள் நடப்பதால் ஆக.,2 முதல் தபால் நிலையங்களில் தபால் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து திருவாடானை தபால் நிலைய அலுவலர்கள் கூறியதாவது: மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை தடையற்ற, பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவற்காக தொழில் நுட்ப பணிகள் துவங்கியதால் தபால் சேவை சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பணிகள் நேற்று முடிந்துள்ளதால் இன்று (ஆக.6) முதல் திருவாடானை, கிராமபுற தபால் நிலையங்களில் சேவை துவங்கும் என்றனர்.

