ADDED : பிப் 21, 2024 11:00 PM

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ பூஜை நடந்தது.
மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்: பிரதோஷத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சிவன் கோயில்களில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு, நந்திக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனைநடந்தது.
ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் மாலை 4:30 மணிக்கு நந்தி, மூலவருக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மனுடன் உட்பிரகாரத்தை வலம் வந்தார்.
இதே போல வெளிபட்டணம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்,குமரய்யா கோவில் ரோட்டில் உள்ள சிவஞானேஸ்வரர் கோயில், ஆர்.எஸ்.மடை ராஜேஸ்வரன் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில், வினை தீர்க்கும் வேலவர் கோயில் ஆகிய இடங்களில் பிரதோஷ வேளையில் நந்தீஸ்வரர், லிங்கத்திற்கு அபிேஷக பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.