
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில மன்ற போட்டிகள் திருச்சி தோளூர்ப்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இதில் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி ரக்ஸனா ஆங்கில இலக்கிய மன்றப் போட்டியில் கட்டுரை எழுதுதலில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். மாணவியை தலைமை ஆசிரியர் யுனைசி, ஆங்கில இலக்கிய மன்றப் பொறுப்பாசிரியர் வளர்மதி பாராட்டினர்.

