sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க செப்.30 வரை சிறப்பு சமரச தீர்வு முகாம்  முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்

/

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க செப்.30 வரை சிறப்பு சமரச தீர்வு முகாம்  முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க செப்.30 வரை சிறப்பு சமரச தீர்வு முகாம்  முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க செப்.30 வரை சிறப்பு சமரச தீர்வு முகாம்  முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்


ADDED : ஜூலை 17, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு சமரச தீர்வு முகாம் செப்.,30 வரை நடக்கிறது.

ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சமரச தீர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரான மெஹ்பூப் அலிகான் கூறியிருப்பதாவது:

சிறப்பு சமரச தீர்வு முகாமில் மண வாழ்க்கை தொடர்பான வழக்குகள், சொத்து வழக்குகள், பணப்பிரச்னை மற்றும் காசோலை வழக்குகள், நிதி நிறுவனத்தில் பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகள், குற்ற வழக்குகளில் சமரசம் ஏற்படக்கூடிய வழக்குகள், வங்கி தொடர்பான வழக்குகள் உட்பட பல்வேறு வகையான வழக்குகள் சமரச தீர்வு மையத்தில் தீர்வு காணப்பட உள்ளன.

சமரச தீர்வு மையத்தில் பயிற்சி பெற்ற மத்தியஸ்தர்கள் மூலம் வழக்குகள் பேசி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்வு காணப்படும். சமரசம் ஏற்பட்ட பின் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.

வழக்கில் சமரசம் ஏற்பட்டால் நீதிமன்ற கட்டணம் திரும்ப செலுத்தப்படும். கால, நேர விரயம், மன உளைச்சல் போன்றவை இதன் மூலம் தீர்க்கப்படும்.

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட சமரச தீர்வு மையத்திலும், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் உள்ள கிளை சமரச தீர்வு மையங்களிலும் இந்த சிறப்பு முகாம் செப்., 30 வரை நடக்கிறது. இதில் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு செப்.,மாதம் இறுதிக்குள் நிச்சயம் தீர்வு காணப்படும்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீர்வு மையம் செயல்படும். வழக்கு தொடுத்தவர்கள், எதிர் மனுதாரர்கள், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தாலும் ஆன்-லைன் மூலம் அவர்கள் கருத்தை காணொளி காட்சி மூலம் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் தற்போது நடந்து வரும் வழக்குகளை கூட சமரசம் செய்து கொள்ள விரும்பினால், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் புகார்தாரர், எதிர் மனுதாரர் என யார் வேண்டுமானாலும் வேண்டுகோள் விடுத்து ஏற்கப்பட்டு செப்.,க்குள் நிச்சயம் தீர்வு காணப்படும். இதை பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்து கொள்ளலாம்.

ரகசியம் காக்கப்படும்


சமரச தீர்வு மையத்துக்கு அனுப்புவதற்கு தகுதியான வழக்குகள் நீதிமன்றம் பரிந்துரையின் பேரில் ஏற்கப்பட்டு, புகார்தாரர், எதிர்மனுதாரர் ஆகிய இருவரையும் அழைத்து ஒன்றாகவும் தனித்தனியாகவும் அழைத்து பேசுவார்கள்.

இதில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ரகசியம் காக்கப்படும். எந்த காரணத்தை கொண்டும் ஒருவர் தெரிவிக்கும் ரகசியம் பிறரிடம் கூறப்படாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us