sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலாடி சந்தையில் மகளிர் சுய உதவி குழுவின் உற்பத்தி பொருள் விற்பனை

/

கடலாடி சந்தையில் மகளிர் சுய உதவி குழுவின் உற்பத்தி பொருள் விற்பனை

கடலாடி சந்தையில் மகளிர் சுய உதவி குழுவின் உற்பத்தி பொருள் விற்பனை

கடலாடி சந்தையில் மகளிர் சுய உதவி குழுவின் உற்பத்தி பொருள் விற்பனை


ADDED : பிப் 10, 2025 04:38 AM

Google News

ADDED : பிப் 10, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: கடலாடியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் இயற்கை சந்தை விற்பனை நேற்று துவக்கப்பட்டது. மாவட்ட மேலாளர் தங்கபாண்டியன் துவக்கி வைத்தார்.

கடலாடி மகளிர் திட்ட வட்டார மேலாளர் செந்தில் வேல் கூறியதாவது: மகளிர் திட்டம் சார்பில் நடந்த இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள், கீரைகள், காளான் மற்றும் பழ வகைகளை கொண்டு 12 விதமான கடைகளை அமைத்து விற்பனை செய்தனர்.

சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பினாயில், சோப் ஆயில், கருவாடு, ஒயர் கூடைகள், பனங்கிழங்கு, நவதானிய இனிப்பு வகைகள் லாப நோக்கமின்றி குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் விற்கப்பட்டது என்றார்.

வட்டார மேலாளர் சிவக்குமார் உட்பட மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். இது போன்று இயற்கை சந்தை கடலாடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்துார் வட்டாரங்களில் நடக்க இருப்பதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us