/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஏப் 08, 2025 05:39 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.
பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் குறித்த 305 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்கள் மீது விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரங்கள் 10 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.
சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தவச்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி பங்கேற்றனர்.