/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
/
நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 12, 2025 11:06 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் நாளை (ஜூன் 14) காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
மாதந்தோறும் 2வது சனிக்கிழமை சூழற்சி முறையில் மாவட்டத்தின்அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில்பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. இதன்படி நாளை (ஜூன் 14) கீழ்கண்ட இடங்களில் காலை 10:00மணிக்கு பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மண்டபம் அருகே இருமேனி, ராமேஸ்வரம் காந்திநகர், தொண்டி தினையத்துார், நயினார்கோவில் அ.காச்சான் கிராமம், முதுகுளத்துார் ஆனைசேரி, சிக்கல், கமுதி கிழக்கு கருங்குளம், திருப்புல்லாணி அருகே தினைக்குளம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குறைதீர்க்கும்முகாம் நடைபெற உள்ளது.
இதில் மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், பெயர் சேர்த்தல்,பிழைத்திருத்தம், போட்டோ பதிவேற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் பதிவு செய்தல்,புதிய ரேஷன் கார்டு, கடைக்கு வரமுடியாத மூத்தக்குடி மக்களுக்கான அங்கீகாரச்சான்று ஆகிய மனுக்கள் வழங்கலாம்.
ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துஉள்ளார்.