sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சேதமடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகம்

/

சேதமடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகம்

சேதமடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகம்

சேதமடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகம்


ADDED : நவ 20, 2024 05:43 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

முதுகுளத்துார் -சாயல்குடி ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உட்பட அலுவலக பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தை முறையாக பராமரிப்பு செய்யாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. அப்போது யாரும் இல்லாததால் எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை.

உதவி பொறியாளர்கள் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் பூட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். பணியாளர்களும் அச்சப்படுகின்றனர்.

எனவே ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us