நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி :   கடலாடி அருகே மலட்டாறு சந்திப்பில் உள்ள பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வக ஆசிரமத்தில் ராகுகால பூஜை நடந்தது.
முன்னதாக ஆசிரம நிறுவனர் அழகு துரைசிங்கம் மாரியூர் கடற்கரையில் உள்ள பூவேந்தியநாதர் கோயிலில் தியானம் செய்தார். பின்னர் ஆசிரமத்திற்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் கலைமுருகன், ராமையா, ஈஸ்வரபாண்டி செய்திருந்தனர்.

