நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்தது.
இப்பகுதியில் விவசாயிகள் உழவுடன் கூடிய விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழையால் வயல்கள் ஈரப்பதமாக இருப்பதால் உழுவதற்கு ஏற்ற சூழல் இருந்தது.