/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அனுமார் கோயிலில் ராமர்- சீதை திருக்கல்யாணம்
/
பரமக்குடி அனுமார் கோயிலில் ராமர்- சீதை திருக்கல்யாணம்
பரமக்குடி அனுமார் கோயிலில் ராமர்- சீதை திருக்கல்யாணம்
பரமக்குடி அனுமார் கோயிலில் ராமர்- சீதை திருக்கல்யாணம்
ADDED : ஏப் 08, 2025 05:41 AM

நாளை ஆஞ்சநேயர் அபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசுவாமி கோயிலில் ராம நவமி விழாவையொட்டி சீதா-ராமர் திருக்கல்யாணம் நடந்தது.
பரமக்குடி நகராட்சி எதிரில் உள்ள இக்கோயிலில் மூலவராக புனித புளியமரம் உள்ளது. மேலும் சீதா, ராமர், லட்சுமணன் சன்னதி உள்ளது. ராமநவமி விழா ஏப்., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. ஏப்.,4 இரவு இரட்டை கருட சேவை நடந்தது. ஏப்., 5 மாலை புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. அப்போது குழந்தை பேறு வேண்டி விரதம் இருந்தவர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மறுநாள் ராம ஜனனம் எனப்படும் ராமநவமி விழா நடந்தது. நேற்று காலை சங்கர மடத்திலிருந்து ராமர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் உலா வந்தார்.
தொடர்ந்து 11:45 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து தங்களது மாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாண சடங்குகள் நிறைவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சீதா-ராமர் பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வந்தனர்.
இன்று தீர்த்தவாரி உற்ஸவம், நாளை ஆஞ்சநேயர் அபிஷேகம் மற்றும் திருவீதி உலா வர உள்ளார்.
அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.