நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலை சேர்ந்தவர் லியாகத் அலி.
திருமணமானவர். இவரும் ராமநாதபுரம் ஆதம்நகரை சேர்ந்த, பஷீர் ரஹ்மானும் மீன்
வியாபாரம் செய்து வந்தனர். பஷீர் ரஹ்மான் வீட்டுக்கு லியாகத் அலி
வரும்போது, அவரது மகள் அல்வபிராவுடன், 16, பழக்கம் ஏற்பட்டது. கடந்த 19ம்
தேதி முதல் அல்வபிராவை காணவில்லை. தாயார் பரிதாபீவி கேணிக்கரை போலீசில்,
தனது மகளை, லியாகத் அலி கடத்தியதாக புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து
வருகின்றனர்.