/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மேல்நிலை பள்ளி இல்லை ராமநாதபுரம் மாணவர்கள் கவலை
/
அரசு மேல்நிலை பள்ளி இல்லை ராமநாதபுரம் மாணவர்கள் கவலை
அரசு மேல்நிலை பள்ளி இல்லை ராமநாதபுரம் மாணவர்கள் கவலை
அரசு மேல்நிலை பள்ளி இல்லை ராமநாதபுரம் மாணவர்கள் கவலை
ADDED : ஏப் 04, 2025 02:30 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகரில் மாணவர்களுக்கான மேல்நிலை பள்ளி இல்லாததால், நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகரில் மாணவ - மாணவியர் பயிலும் வகையில் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளி, எம்.எஸ்.கே., நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவை உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவியருக்கு மட்டும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க நகரில் எந்த அரசுப்பள்ளியும் இல்லை. குறைந்தது, 15 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். இதனால் வேறு வழியின்றி, ஏதேனும் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது.
அரசு பள்ளிகளில் படிக்க முடியாததால், நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்காமல் போகிறது. இதனால், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது.
வள்ளல்பாரி நகராட்சி பள்ளியை தரம் உயர்த்தக்கோரி, பள்ளிக்கல்வி ஆணையருக்கு 2021 - -22ம் கல்வியாண்டில் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், இன்று வரை ராமநாதபுரம் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளியாக எதுவும் தரம் உயர்த்தப்படவில்லை.
முதல்வர் தலையிட்டு, இந்த பகுதியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான அரசு பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என, ராமநாதபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.