sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம்-- இலங்கை கப்பல் போக்குவரத்து மீனவர்களுக்கு நோட்டீஸ்

/

ராமேஸ்வரம்-- இலங்கை கப்பல் போக்குவரத்து மீனவர்களுக்கு நோட்டீஸ்

ராமேஸ்வரம்-- இலங்கை கப்பல் போக்குவரத்து மீனவர்களுக்கு நோட்டீஸ்

ராமேஸ்வரம்-- இலங்கை கப்பல் போக்குவரத்து மீனவர்களுக்கு நோட்டீஸ்


ADDED : ஜன 23, 2025 01:38 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம்- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து துவக்குவதற்காக ராமேஸ்வரத்தில் கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது. இதற்காக மீனவர் வீடுகளை அப்புறப்படுத்த தமிழக கடல்சார் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

ராமேஸ்வரம்- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 1986ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே ராமேஸ்வரத்தில் உள்ள துறைமுக அலுவலக கட்டடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு கடற்கரையில் பாலம் அமைக்க மண் பரிசோதனை நடத்தினர்.

தமிழக கடல்சார் வாரியத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் தற்போது மீனவர்களின் மீன்பிடி தளவாட பொருள்களை கையாளும் வீடுகளாகவும், மீன்களை தரம் பிரிக்கும் கம்பெனியாகவும் உள்ளது. இதற்காக கடல்சார் வாரியம் மீனவர்களிடம் நிலவரி வசூலித்தது.

இப்பகுதியில் புதியதாக துறைமுக அலுவலகம், பயணிகள் ஓய்வறை, டிக்கெட் மற்றும் பரிசோதனை மைய கட்டடங்கள் வர உள்ளதால் நேற்று 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன்படுத்தும் வீடுகள், கம்பெனிகளை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள் மீனவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.






      Dinamalar
      Follow us