sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு

/

ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு

ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு

ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு


ADDED : பிப் 15, 2024 05:05 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளதால் பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, திருச்செந்துார், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. இதனால் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும்.

இந்நிலையில் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள வணிகக் கடைகள், அம்மா உணவகம் முன்பு தினமும் நுாறுக்கு மேற்பட்ட டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து விடுகின்றனர்.

இதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் அரசு, தனியார் சுற்றுலாப் பஸ்கள் சென்று திருப்ப முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் அம்மா உணவகத்திற்குள் சாப்பிட செல்லும் மக்கள், டூவீலர் ஆக்கிரமிப்பால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நகராட்சி டூவீலர் ஸ்டாண்டை விரிவுபடுத்தி அங்கு நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us