sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

3ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடையால் ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு

/

3ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடையால் ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு

3ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடையால் ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு

3ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடையால் ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு


ADDED : ஜன 03, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:பலத்த சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் 3ம் நாளாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் சில நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் சூறாவளி வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது சிரமம் என்பதால் ஜன., 1 முதல் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். 3ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால் மீன்பிடிக்க செல்ல தடை நீட்டிக்கப்பட்டதால் மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.

அன்றாட குடும்பச் செலவிற்கு வழியின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் மீன்பிடிக்க செல்லாததால் ரூ. 3 கோடி வரை மீன் வர்த்தகம் பாதித்தது.






      Dinamalar
      Follow us