sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கணவாய் மீன் வரத்து சீசன் துவக்கம் ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

/

கணவாய் மீன் வரத்து சீசன் துவக்கம் ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

கணவாய் மீன் வரத்து சீசன் துவக்கம் ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

கணவாய் மீன் வரத்து சீசன் துவக்கம் ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி


ADDED : மே 30, 2025 01:40 AM

Google News

ADDED : மே 30, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலில் கணவாய் மீன்வரத்து சீசன் துவங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே தினமும் அதிகாலை 5:00 மணிக்கு நாட்டுப்படகில் 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். இவர்கள் கரையில் இருந்து 2 முதல் 3 கி.மீ.,ல் நடுக்கடலுக்கு சென்றதும், நாட்டுப்படகில் வைத்துள்ள தெர்மாகோலில் வடிவமைத்த சிறிய ரக மிதவையை கடலில் போட்டு மீனவர்கள் தனித்தனியாக துாண்டிலில் கணவாய் மீன் பிடிப்பார்கள்.

இதன் மூலம் தினமும் ஒரு மீனவருக்கு 4 முதல் 6 கிலோ வரை கணவாய் மீன்கள் சிக்கும். உணவு, குடிநீர் இன்றி மீன்பிடிப்பதால் சோர்வடையும் மீனவர்கள் காலை 11:00 முதல் மதியம் 12:00 மணிக்குள் ராமேஸ்வரம் கரைக்கு திரும்பி விடுவர். இம்மீன்களை தரம் வாரியாக ரூ.300 முதல் ரூ. 400 வரை மீனவர்கள் விற்பர்.

தற்போது தென்மேற்கு பருவக் காற்று வீசுவதால் கடலில் ஏற்பட்ட நீரோட்டம் தட்பவெப்ப மாறுபாட்டால் கணவாய் மீன்வரத்து சீசன் துவங்கியுள்ளது. இதனால் எதிர்பார்த்த வருவாய் கிடைப்பதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us