/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை
/
ராமேஸ்வரம் மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை
ADDED : ஆக 27, 2025 03:15 AM
ராமேஸ்வரம்,:இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு மன்னார் நீதிமன்றம் ரூ.18.50 லட்சம் அபராதம் விதித்தது.
ஆக.,9ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 6 மீனவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 18 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ. 4.5 லட்சம்) அபராதம் விதித்தும், கட்ட தவறினால் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், மற்றொரு மீனவரான டல்லஸ்55, என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ.12,500) அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.