/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
/
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
ADDED : அக் 08, 2025 01:05 AM
திருவாடானை; திருவாடானை தாலுகா கொடிப்பங்கு கிராமத்தில் பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகள் குறித்து மக்கள் மனுக்கள் கொடுக்கலாம். பொது வினியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வகையில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இது குறித்து திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை தாலுகா கொடிப்பங்கு ரேஷன் கடையில் அக்.,11 ல் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். பொது வினியோகத்தில் ஏற்படும் குறைகளை குறிப்பிட்டு மனுக்களாக கொடுக்கலாம். பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் செய்வது, அலைபேசி எண் மாற்றுதல், குடும்பதலைவர் போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என்றனர்.