ADDED : அக் 02, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவில் முதல் முறையாக பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படை பெண் போலீசார் திலகவதி, கமலி ஆகியோர் தேவசேனா என்ற மோப்ப நாயுடன் 6 மாதம் பயிற்சி எடுத்தனர்.
மோப்ப நாயை கையாளும் முறை, மோப்ப நாய் உதவியுடன் வெடி மருந்து கண்டுபிடிப்பது, கட்டளையிடும் முறை குறித்து இரு போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றுகின்றனர்.