sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கையில் வாடும் மீனவர்களின் உறவினர்கள் பாம்பனில் முற்றுகை

/

இலங்கையில் வாடும் மீனவர்களின் உறவினர்கள் பாம்பனில் முற்றுகை

இலங்கையில் வாடும் மீனவர்களின் உறவினர்கள் பாம்பனில் முற்றுகை

இலங்கையில் வாடும் மீனவர்களின் உறவினர்கள் பாம்பனில் முற்றுகை


ADDED : அக் 24, 2024 02:13 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:கடந்த ஆக., 8ல் பாம்பனில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து, புத்தளம் மாவட்டம் வாரியாபிலா சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த மீனவர்களை தவறுதலாக விசைப்படகு மீனவர்கள் என மீன்துறையினர் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதனால் 35 பேருக்கும், தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், தொடர்ந்து 76 நாட்களாக சிறையில் வாடுகின்றனர்.

இந்நிலையில், மீனவர்களை விடுவிக்கக் கோரி, நேற்று பாம்பன் அக்காள்மடத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்தை மீனவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இவர்களை மீன்துறை அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர். எனினும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்து, அந்த அலுவலகம் முன் அமர்ந்திருந்தனர்.

இதற்கிடையே, ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரையும், இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்தனர்.

இரு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி, படகுகளுடன் மீனவர்களை கைது செய்து, யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us