sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி

/

வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி

வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி

வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி


ADDED : ஆக 26, 2025 11:42 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : வன விலங்குகளால் பயிர்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பரமக்குடி அருகே காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்டவற்றால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் புறக்கணிப்பதாக வனத்துறையினர் மீது விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் பெற இடத்திற்கான அடங்கல், பட்டா, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., சான்றுகள், சேதமான இடத்தில் போட்டோக்கள், மனுதாரரின் 2 பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை நகல் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி 147 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் 27 பேர் முழுமையான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இதில் 3 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் அன்பரசி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us