sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்த மரம் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

/

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்த மரம் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்த மரம் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்த மரம் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி


ADDED : டிச 01, 2024 11:54 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எதிரில் உள்ள அனுமார் கோயில் அருகில் இருந்த காய்ந்த மரம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வெட்டி அகற்றப்பட்டது.

பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் வடக்கு வாசல் பகுதியில் காய்ந்து போன வேப்பமரம் இருந்தது. ஆறு மாதங்களுக்கு மேலாக காய்ந்த மரத்தின் கிளைகள் அவ்வப்போது காற்றின் வேகத்தால் உடைந்து விழுந்தது.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உட்பட நகராட்சி அலுவலகம் வரும் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் அப்பகுதியை கடந்தனர். மேலும் கோயில் திருப்பணி நடக்கும் நிலையில் காய்ந்த மரத்தால் கோபுரங்களுக்கு சிக்கல் இருந்தது.

இதுகுறித்து நவ. 29ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து தாசில்தார் சாந்தி தலைமையிலான குழுவினர் அப்பகுதியை பார்வையிட்டு மரத்தை அகற்ற உத்தரவிட்டனர். காய்ந்து போன மரம் வெட்டி சீர் செய்யப்பட்டது.

அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us