sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ADDED : ஆக 05, 2025 06:17 AM

Google News

ADDED : ஆக 05, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரம் திரவுபதி அம்மன் கோயில் அருகே உள்ள ஊருணியை சுற்றியுள்ள பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அப்பகுதியில் உள்ள 4 கடைகள், 3 வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

காலிசெய்யாத நிலையில் ராமநாதபுரம் தாசில்தார் ரவி தலைமையிலான அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 4 கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

வீடுகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்குமாறு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதனால் வீடுகளை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தாசில்தார் ரவி கூறியதாவது: திரவுபதி அம்மன் கோயில் அருகே உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தற்போது அகற்றப்படுகிறது.

ஆக்கிரமிப்பை காலி செய்யுமாறு பலமுறை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலி செய்ய மறுத்து வந்தனர்.

தற்போது 4 கடைகள் மட்டும் இடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் ஆக.,6ல் அப்புறப்படுத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us