/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல்
/
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல்
ADDED : ஏப் 02, 2025 03:05 AM
உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம்- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதையடுத்து நேற்றிரவு 7:00 மணிக்கு கடந்த ஆருத்ரா தரிசனத்தன்று இங்குள்ள பச்சை மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படிக்களைதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து மரகத நடராஜர் சன்னதி அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அலங்கார யாகசாலை பந்தலில் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மரகத நடராஜர், சகஸ்ரலிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கலசம் புனித நீரால் நிரப்பப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது. யாக வேள்வியில் பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது. 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், குருக்கள் வேத விற்பன்னர்களால் தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது.
ஒவ்வொரு சந்நிதியிலும் தர்ப்பை கலசம் கும்பம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் வைக்கப்பட்டது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று இரவு முதல் தொடர்ந்து ஏப்.,4 இரவு 7:00 மணி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம்.
ஏப்.,4ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு இரவு 8:00 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடப்பட்டு கம்பி கதவுகளுடன் நடை அடைக்கப்படும். 2010ல் நடந்த கும்பாபிஷேகத்தில் இதுபோன்று சந்தனம் படி களைதல் நிகழ்வு நடந்தது.