/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதங்கொத்தங்குடி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
/
ஆதங்கொத்தங்குடி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
ஆதங்கொத்தங்குடி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
ஆதங்கொத்தங்குடி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2024 05:18 AM
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகேயுள்ள ஆதங்கொத்தங்குடி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி சனி உள்ளிட்ட விேஷச நாட்களில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.
ஆதங்கொத்தங்குடியில் உள்ள பழமையான ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தென்திருப்பதி என அழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை, மாலை,இரவு என மூன்று வேளைகளில் அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. முதுகுளத்துார், சாயல்குடி, ராமநாதபுரம், கமுதி,பரமக்குடி ஆகிய இடங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
முதுகுளத்துார் பஸ் பணிமனையில் இருந்து ஆதங்கொத்தங்குடி, பூசேரி வழியாக ஒருசில நேரங்களில் மட்டும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
குடும்பத் தலைவி சண்முகவள்ளி கூறியதாவது, ஆதங்கொத்தங்குடியில் கிராமத்திற்கு போதிய பஸ் வசதியின்றி பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
கூடுதல் பணம் செலவு செய்து சரக்கு வாகனம், ஆட்டோவில் வந்து செல்கின்றனர்.
எனவே விசேஷ நாட்களில் முதுகுளத்துாரில் இருந்து ஆதங்கொத்தங்குடி சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்றார்