/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் வியாபாரம்: பல வாரங்களாகியும் அகற்றப்படாத மழை நீர்: ராமநாதபுரம் வாரச்சந்தை வியாபாரிகள் அவதி
/
ரோட்டில் வியாபாரம்: பல வாரங்களாகியும் அகற்றப்படாத மழை நீர்: ராமநாதபுரம் வாரச்சந்தை வியாபாரிகள் அவதி
ரோட்டில் வியாபாரம்: பல வாரங்களாகியும் அகற்றப்படாத மழை நீர்: ராமநாதபுரம் வாரச்சந்தை வியாபாரிகள் அவதி
ரோட்டில் வியாபாரம்: பல வாரங்களாகியும் அகற்றப்படாத மழை நீர்: ராமநாதபுரம் வாரச்சந்தை வியாபாரிகள் அவதி
ADDED : ஜன 02, 2025 04:52 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே டி-பிளாக் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் குளம் போல பல வாரங்களாக மழை நீர் தேங்கியுள்ளதால் ரோட்டில் கடைகள் அமைப்பதால் வியாபாரிகள், மக்கள் பொருட்களை விற்க, வாங்க சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை திடலில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை செயல்பட்டது. அங்கு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடப்பதால் தற்போது பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் அம்மா பூங்கா அருகே புதன்தோறும் வாரச்சந்தை நடக்கிறது.
இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்கள், வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் சரக்கு வாகனங்கள், கார், டூவீலரில் வருகின்றனர். இந்நிலையில் நவ., டிச., மாதங்களில் பெய்த மழையால் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி குப்பை கொட்டுவதால் கழிவுநீராகி நோய்பரப்பு இடமாக மாறிஉள்ளது. இதனால் நேற்று (புதன்) கடை வைக்க இடமின்றி வியாபாரிகள் டி-பிளாக் ரோட்டில் வியாபாரம் செய்தனர். பொருட்கள் வாங்க வரும் மக்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே வாரச்சந்தை வியாபாரிகளிடம் ரூ.பல ஆயிரம் கட்டணம் வசூல் செய்யும் பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம், மழைநீரை அகற்றவும் அவ்விடத்தில் மண் கொட்டி சமன் செய்ய வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தினர்.