/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் ரூ.22 லட்சம் கஞ்சா பறிமுதல் : கைது 4
/
இலங்கையில் ரூ.22 லட்சம் கஞ்சா பறிமுதல் : கைது 4
ADDED : ஆக 30, 2025 06:18 AM
ராமேஸ்வரம்; இலங்கை கடற்படை வீரர்கள் ரூ.22.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
இலங்கை நெடுந்தீவு அருகே ரோந்து சுற்றிய இலங்கை கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான அந்நாட்டு பைபர் கிளாஸ் படகை மடக்கி சோதனையிட்டனர்.
அந்த படகிற்குள் 57 பார்சலில் 112 கிலோ கஞ்சா இருந்தது. இதனை தமிழக கடலோர பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் நாட்டுப்படகில் கடத்தி வந்து இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். இதன் இந்திய மதிப்பு ரூ. 22.40 லட்சம்.
படகில் இருந்த இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த 4 கடத்தல்காரர்களை இலங்கை வீரர்கள் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த கஞ்சாவை ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இருந்து கொண்டு சென்று கொடுத்தது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.