sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோடைகாலத்தில் தரமற்ற குளிர்பானம் விற்பனை

/

கோடைகாலத்தில் தரமற்ற குளிர்பானம் விற்பனை

கோடைகாலத்தில் தரமற்ற குளிர்பானம் விற்பனை

கோடைகாலத்தில் தரமற்ற குளிர்பானம் விற்பனை


ADDED : பிப் 29, 2024 10:16 PM

Google News

ADDED : பிப் 29, 2024 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி - கோடை கால விற்பனையை பயன்படுத்தி தரமற்ற குளிர்பானங்கள், பழ ஜூஸ்கள் விற்பனை அதிகரிப்பதால் சுகாதாரத் துறையினர் கண்காணிகாணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடை காலம் துவங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் சூழலில் வெயிலை பயன்படுத்தி குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

சில குளிர்பான கடைகளில் பழ ஜூஸ் என்ற பெயரில் தரமற்ற பழங்களை கூடுதல் இனிப்பு சுவையுடன் வைத்து விற்பனை செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாங்கீர், ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் இனிப்பிற்காக சாக்ரின் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். சாலையோர கடைகளிலும் இதுபோல் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இது போன்றவற்றை வெயில் தாக்கத்தில்வாங்கி அருந்திவிட்டு சளி, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர் சோதனை செய்து தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us