sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடி சாலையில் மணல்; சுற்றுலா வாகனங்களுக்கு சிரமம்

/

தனுஷ்கோடி சாலையில் மணல்; சுற்றுலா வாகனங்களுக்கு சிரமம்

தனுஷ்கோடி சாலையில் மணல்; சுற்றுலா வாகனங்களுக்கு சிரமம்

தனுஷ்கோடி சாலையில் மணல்; சுற்றுலா வாகனங்களுக்கு சிரமம்


ADDED : செப் 08, 2025 11:54 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மணலில் வானங்கள் சிக்குவதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை, 1964 புயலில் இடிந்த சர்ச், ரயில்வே கட்டடங்களை காண தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி வருகின்றனர். இச்சாலையில் பார்க்கிங் வசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சில மாதங்களாக வீசிய சூறாவளியால் தனுஷ்கோடி கடலோரத்தில் உள்ள மணல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவிந்து கிடக்கிறது.

இதனை அகற்றி விபரீதம் ஏற்படுவதை தடுக்க சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்த மணல் குவியலில் வாகனங்கள் சிக்குவதால், மீட்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us