ADDED : நவ 10, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி கீழராமநதியில் மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவின் வருடாந்திர சந்தனக்கூடு விழா நடந்தது.
பள்ளிவாசலில் சந்தனக்கூடு துவா செய்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஏராளமானோர் தமிழர்களின் பாரம்பரியமான களிகம்பு நடனமாடி ஊர்வலமாக சென்றனர். தர்ஹா வந்தடைந்த பின்பு அனைத்து மதத்தினரும் மலர்கள் வைத்து வழிபட்டனர். விழா ஏற்பாட்டினை விழா கமிட்டியாளர்கள் செய்தனர்.

