ADDED : ஏப் 18, 2025 05:34 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியம் சுமைதாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் ஜெயா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் முனீஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாநில அளவில் கலைத்திருவிழாவில் மாறுவேட போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் முவின் கிருஷ்ணா, மாவட்ட அளவில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வட்டாரகல்வி ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வக்குமார், பாண்டியராஜ் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்றனர்.
