/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு
/
ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு
ADDED : டிச 12, 2024 02:32 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் வீசும் சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதி எழுந்தன.
இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்ததால் பக்தர்கள் அச்சத்துடன் நீராடினர்.
டிச.13 வரை பாக்ஜலசந்தி கடலில் சுறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.