நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வல்மீகநாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் புரட்டாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.