/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய வில்வித்தை, கேரம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்கள்
/
தேசிய வில்வித்தை, கேரம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்கள்
தேசிய வில்வித்தை, கேரம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்கள்
தேசிய வில்வித்தை, கேரம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்கள்
ADDED : டிச 06, 2024 05:26 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடந்த வில்வித்தை, கேரம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
தேசிய பள்ளிகளின் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் குஜராத்தில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் ராமநாதபுரம் நேஷன் அகாடமி ஐ.சி.எஸ்.இ.,பள்ளி மாணவர் ஸ்ரீசரண் 17, பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதே போல் உத்திரபிரதேசம் கான்பூரில் நடந்த தேசிய கேரம் போட்டியில் சாமுவேல் லாரன்ஸ், கிப்ட்ஸன் டேனியல் இரட்டையருக்கான 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்று மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களை கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா, கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம், முதல்வர் ஜெயலட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.