/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்தில் தந்தை பாதிப்பு ; பஸ்சை ஜப்தி செய்ய வைத்த மகன்
/
விபத்தில் தந்தை பாதிப்பு ; பஸ்சை ஜப்தி செய்ய வைத்த மகன்
விபத்தில் தந்தை பாதிப்பு ; பஸ்சை ஜப்தி செய்ய வைத்த மகன்
விபத்தில் தந்தை பாதிப்பு ; பஸ்சை ஜப்தி செய்ய வைத்த மகன்
ADDED : ஜூலை 02, 2025 07:49 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட தந்தைக்கு இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை வழக்கறிஞரான மகன் வாதாடி ஜப்தி செய்ய வைத்தார்.
கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் 68. இவர் அங்குள்ள புது பள்ளிவாசலில் மோதியராக பணிபுரிந்தார். 2015 டிச., ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்தார். கீழக்கரை அருகே வேகத்தடையில் ஏறிய பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அபுபக்கர் கழுத்தெலும்பு, தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். இதற்காக அவரது மகன் வழக்கறிஞரான முகமது சதக்கத்துல்லா ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்டு ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் 2023 ல் ரூ.10 லட்சத்து 23 ஆயிரத்து 353 வழங்க உத்தரவிட்டது.
இந்த தொகையை திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகம் வழங்கவில்லை. இதனால் வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்து 55 ஆயிரத்து 552 வழங்க கோரி நிறைவேற்றுதல் மனு செய்தார். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மோகன்ராம் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
ராமேஸ்வரத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போது நீதிமன்ற பணியாளர்கள்பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வழக்கறிஞரானமகன் சதக்கத்துல்லா கோர்ட்டில் வதாடி பஸ்சை ஜப்தி செய்ய வைத்தார்.