/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
/
நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
ADDED : டிச 26, 2025 05:20 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பொதுமக்களின் வசதிக்காக நாளை, நாளை மறுநாளும் (டிச.,27,28) மற்றும் ஜன.,3, 4 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்நடக்கிறது.
இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி 2026 ஜன.,1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து உறுதி மொழி படிவம் மற்றும் உரிய ஆவணங்களுடன் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://voters.eci.gov.in) மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். பொதுமக்களின் வசதிக்காக நாளையும் நாளை மறுநாள் (டிச.,27,28) மற்றும் ஜன.,3, 4 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது.
பொதுமக்கள் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

