நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிப்பட்டினம் கள்ளர் தெருவில் உள்ள சடச்சி முத்துமாரியம்மன் கோயிலில் முளை கொட்டு உற்ஸவம் நடந்தது. பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
இரவில் பெண்களின் கும்மியாட்டம், ஆண்களின் ஒயிலாட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று ஊருணியில் சேர்த்தனர்.