/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்கள் கைதை கண்டித்து இலங்கை துாதரகம் முற்றுகை சென்னையில் அக்.27ல் நடத்த முடிவு
/
மீனவர்கள் கைதை கண்டித்து இலங்கை துாதரகம் முற்றுகை சென்னையில் அக்.27ல் நடத்த முடிவு
மீனவர்கள் கைதை கண்டித்து இலங்கை துாதரகம் முற்றுகை சென்னையில் அக்.27ல் நடத்த முடிவு
மீனவர்கள் கைதை கண்டித்து இலங்கை துாதரகம் முற்றுகை சென்னையில் அக்.27ல் நடத்த முடிவு
ADDED : அக் 19, 2025 03:19 AM
ராமநாதபுரம்: தமிழகம், புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து சென்னையிலுள்ள அந்நாட்டு துாதரகத்தை அக்.27ல் முற்றுகையிடவுள்ளதாக அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்களையும், புதுச்சேரி- மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினர் 30 படகுகளை கைப்பற்றியதுடன் 180 மீனவர்கள் கைது செய்துள்ளனர்.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது.
மீனவர்கள் இரவு நேரங்களில் கடல் எல்லையை கணிக்க முடியாததால் தவறுதலாக எல்லை தாண்டி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக மீனவர்களை கைது செய்வது மனிதாபிமானமற்றது.
இதனால் அகில இந்திய மீனவர் காங்., சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணை துாதரகத்தில் அக்.,27 முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அகில இந்திய காங்., தமிழ்நாடு, புதுச்சேரி பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, தமிழக காங்., நிர்வாகிகள் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.