sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை நபர் சிக்கினார்

/

தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை நபர் சிக்கினார்

தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை நபர் சிக்கினார்

தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை நபர் சிக்கினார்


ADDED : ஜூலை 11, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடி 3ம் மணல் தீடையில் ஊடுருவிய இலங்கையைச் சேர்ந்தவரை மரைன் போலீசார் கைது செய்தனர்.

இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் கியோசன் 28. இவர் நேற்று காலை 9:30 மணிக்கு தனுஷ்கோடியில் இருந்து 4 கி.மீ., துாரத்திலுள்ள 3ம் மணல் தீடையில் ஊடுருவி இருப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் வந்தது. மரைன் எஸ்.ஐ., காளிதாஸ் மற்றும் போலீசார் படகில் தீடைக்கு சென்று கியோசனை மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அழைத்து வந்தனர்.

பின் கியோசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாய், தந்தையுடன் அகதியாக வந்து வேலுார் வாலாஜாபேட்டை முகாமில் தங்கியதும், அங்கு போதிய வருவாய் இல்லாததால் இலங்கையில் உள்ள வீடு, சொத்துக்களை விற்க 2024 ஜூனில் விமானம் மூலம் இலங்கை சென்றதும், அங்கு சொத்துகளை விற்க முடியாததால் மீண்டும் கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இவர் மீது இலங்கையில் குற்ற வழக்கு ஏதேனும் உள்ளதா என மத்திய, மாநில உளவு போலீசார் விசாரிக்கின்றனர். கியோசனை ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us