sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை போலீஸ்காரர் வழக்கு செப்.16 க்கு ஒத்திவைப்பு

/

இலங்கை போலீஸ்காரர் வழக்கு செப்.16 க்கு ஒத்திவைப்பு

இலங்கை போலீஸ்காரர் வழக்கு செப்.16 க்கு ஒத்திவைப்பு

இலங்கை போலீஸ்காரர் வழக்கு செப்.16 க்கு ஒத்திவைப்பு


ADDED : செப் 09, 2025 03:53 AM

Google News

ADDED : செப் 09, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழகம் தப்பி வந்த இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கை செப்.,16க்கு ஒத்தி வைத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் உள்ள மரக்கடையில் இருந்து 2020-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றினர்.

இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா 32, போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை திருடி தனது சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.

இதனால் பிரதீப் குமார் பண்டாராவை அந்நாட்டு போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதையறிந்தவர் தமிழகத்திற்கு தப்பி வந்தார். அவரை மண்டபம் கடலோர காவல் படை போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் வழக்கானது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்.,16க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us